search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தனார் மரணம்"

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை.
    • கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார்.

    ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் மார்க்கிஸ்(வயது50) கொத்தனார். இவரது மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை. அவர் கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×